Header Ads

ரோஹிதிக்கு என்ன ஆச்சு ?? ஆம்பியர் என்ன கூறினார்?

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மும்பை அணியின் அணித்தலைவர் ரோஹித் சர்மாவுக்கு சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை புனே அணியிடம் தோல்வியடைந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்து கொண்டிருந்த மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

களத்தில் ரோஹித் சர்மாவும், ஹர்திக் பாண்டியாவும் இருந்தனர், புனே வீரர் உனத்கண்ட் வீசிய முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க இரண்டாவது பந்து வைடு ஆக சென்றது.

இதனை நடுவர்கள் வைட் என அறிவிக்காமல் இருந்ததால், ரோஹித் சர்மா நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

இது போட்டி விதிமுறைகளை மீறிய செயல் என கூறியுள்ள ஐபிஎல் நிர்வாகம், சம்பளத்திலிருந்து 50 சதவிகிதம் அபராதமாக விதித்துள்ளது.

No comments

Powered by Blogger.