Header Ads

சூதாட்ட சர்ச்சை : தென்னாபிரிக்க வீரருக்கு அதிரடியாக தடை

கிரிக்கெட் போட்டிகள் என்றாலே தற்போது சூதாட்டத்தில் பலர் சிக்கிக்கொள்வது மட்டுமன்றி சில வீரர்களுக்கு வாழ்நாள் தடை கூட வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இறுதியாக இணைந்தவர் தான் பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் இர்பான்.

இந்த நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து ட்சோட்சோபே சூதாடடத்தில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

33 வயதான லோன்வபோ ட்சோட்சோபே, 5 டெஸ்ட் போட்டிகளிலும், 61 ஒருநாள் போட்டிகளிலும், 23 T20 போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணி சார்பில் விளையாடியுள்ளார்.

இவ்வாறு இருக்க, உள்ளூர் T-20 போட்டி ஒன்றின் போது இவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு, தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.

No comments

Powered by Blogger.