சிறுமியின் உயிரை பறித்த இளம்பெண் அதிரடி கைது
கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியானது தொடர்பாக பெண் ஓட்டுனர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்ரோ நகருக்கு அருகில் உள்ள Markham பகுதியில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.10 மணியளவில் தோழிகள் நால்வர் ரோஞ் ரோவர் சொகுசு காரில் பயணம் செய்துள்ளனர்.
காரை 22 வயதான இளம்பெண் ஒருவர் ஓட்டியுள்ளார். அதிகாலை நேரம் என்பதால் சாலை முழுவதும் பனிப்படலம் சூழ்ந்து காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், 14th Avenue பகுதிக்கு கார் வந்த போது அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்ப முயற்சி செய்துள்ளது. ஆனால், கார் அதிவேகத்தில் வந்ததால் வளைவில் திரும்ப முடியாமல் எதிரே இருந்த குட்டிச்சுவர் மீது மோதி பலமுறை உருண்டுச் சென்றுள்ளது.
No comments