Header Ads

மாணவன் எதிர்காலத்தை கருதி: வரலாற்றில் மீண்டும் மைத்திரி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்குள் பிரவேசித்த பாடசாலை மாணவனுக்கு நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு பரிசு ஒன்று கிடைத்துள்ளது.

குறித்த மாணவன் இன்று பிற்பகல் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த மாணவனுக்கு விசேட பரிசொன்றையும் ஜனதிபதி வழங்கியுள்ளார்.

மேலும் இந்த மாணவனின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆசீர்வதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.