இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை..!
தற்போதைய நிலையில் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் அபிவிருத்தித் தலைவர் சுலக்ஷன ஜயவர்தன இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஒவ்வொரு ஆண்டும் மின்சாரத்துக்கான கேள்வி 6 வீதத்தினால் அதிகரித்து செல்கின்றது.
எனினும், எவ்வித மின் துண்டிப்பும் இன்றி, மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இயங்கிவரும் மின் உற்பத்தி நிலையங்களின் செயல் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க, காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில், இலங்கை மின்சார சபையிடம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, விளக்கம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments