Header Ads

பாடகர் பாலா வருகை! யாழ். மாநகரசபைக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?


தென்னிந்திய பிரபல பாடகர் பாலசுப்பிரமணியத்தின் யாழ். வருகையினால் மாநகர சபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மாநாகர சபை ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தென்னிந்திய கலைஞர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கங்கை அமரன் ஆகியோரின் யாழ். வருகையின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் சுமார் 8 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

மேற்படி மாநகரப் பிரதேசத்திற்குள் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு வரியாக சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தினை பயன்படுத்தியதற்கான 3 நாட்களிற்கான வாடகை நாள் ஒன்றிற்கு 11 ஆயிரம் ரூபா வீதம் 33 ஆயிரம் ரூபாவும் இதற்கான 13 வீத வரிப்பணமும் மாநகரசபைக்கு கிடைக்கப்பெற்றது.

இதன் பிரகாரம் யாழில் இடம்பெற்ற நிகழ்வினால் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு சுமார் 8 லட்சம் ரூபா அளவிலான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. எனவும் சுட்டிக்காட்டினார்

No comments

Powered by Blogger.