Header Ads

நடுவர்கள் கண்ணில் மண்ணைத் தூவிய வார்னர்! இப்படி செய்தாரா?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டியின் போது மும்பை அணி வீரர் பும்ரா வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வார்னர், அந்த பந்தில் பவுண்டரி அடித்தார். அதை தொடர்ந்து 7-வது ஓவரின் முதல் பந்தை தவான் சந்திக்க வேண்டும்.

ஆனால் 7வது ஓவரின் முதல் பந்தையும் வார்னரே எதிர்கொண்டார். இதை களத்தில் இருந்த இந்திய நடுவர்கள் நிதின் மேனன், நந்தன் ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. மூன்றாவது நடுவராக இருந்த பார்டேயும் இதை கவனிக்கவில்லை.



இருப்பினும் வார்னருக்கு தெரியும் நாம் மறுமுனைக்கு மாற வேண்டும் என்று இருப்பினும் இந்த தவறு எப்படி நடந்தது என்பது தெரியவில்லை.

ஒருவேளை நடுவர்கள் வேண்டும் என்றே இதை செய்தார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதனை கண்டு கடுப்பான முன்னாள் வீரர் சேவாக், தனது ட்விட்டர் பக்கத்தில் நம்ம நடுவர்கள் வேற லெவல் என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.