Header Ads

வறுமையில் வாடுகிறாரா விஜய் பட நாயகி?


பத்ரி படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூமிகா. முதல் படமே விஜயுடன் நடித்ததால் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவரது கவனம் முழுவதும் தெலுங்கு திரையுலகை நோக்கியே இருந்தது. தமிழில் ரோஜா கூட்டம்,ஜில்லுனு ஒரு காதல்,களவாடிய பொழுதுகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறையில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் பிரபல யோகா மாஸ்டர் பரத் தாகூரை திருமணம் செய்து மும்பையில் செட்டில் ஆனார். ஆனால் திருமண வாழ்க்கை அவருக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை என்று பேசப்படுகிறது. 

மேலும் பண கஷ்டத்தில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அக்கா, அண்ணி உள்ளிட்ட எந்த வேடமானாலும் நடிக்க தயார் என்று தூது விட்டுள்ளாராம் பூமிகா. தனக்கு நெருக்கமான சினிமா நட்புகளிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளாராம்.

பொருளாதார நெருக்கடியே அவரை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது என்று திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.

No comments

Powered by Blogger.