தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு
தமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.
விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர்.
டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.
விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். தங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம் நடத்தினர்.
No comments