கோத்தாவிற்கு சீனாவில் கிடைத்த கௌரவம் : என்ன சொல்கின்றார் ?
தனக்கு கிடைத்த கௌரவத்தினை நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ நிராகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஸவிற்கு சீன புலமைப் பரிசிலை பெற்றுக் கொண்டு அங்கு கல்வி பயில்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இருப்பினும் அவர் தனக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பம் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக, ஓராண்டு காலம் சீனாவில் தங்கியிருந்து கல்வி கற்க வேண்டும் என்பதனால் அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார் எனவும் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல விருப்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புலமைப் பரிசில் ஒன்றை பெற்றுக் கொண்டு சிங்கப்பூரில் கல்வி கற்றும் வரும் கோதபாய இந்த மாத இறுதியில் நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments