Header Ads

23 வயது இளைஞர் ஒருவரின் அதிர்ச்சிகர செயல்.

மாத்தறை - வல்கம - ஊதார மாவத்தை புகையிரத நிலையத்தின் அருகாமையில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மாத்தறை தொடக்கம் காலி வரை பயணித்த புகையிரதம் வரும் போது கழுத்தை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

23 வயதுடைய இளைஞர் ஓருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு கோட்டை தொடக்கம் பதுளை வரை பயணித்துள்ள புகையிரதத்தில் சுயநினைவிழந்துள்ள நிலையில் நபர் ஒருவர் பதுளை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளினால், சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.