Header Ads

சாரதிகள் அவதானம் : தண்டப்பணம் அதிகரிப்பு


முறையான சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனம் ஒட்டும் சாரதிகளுக்கான தண்டப்பணத்தை மேலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுளள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தண்டப்பணத்தை 15 ஆயிரம் ரூபாய் வரையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டிய சாரதிகளிடம் இதுவரை ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் காலங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளின் தண்டபணத்தையும் 15 ஆயிரமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தண்ட பண அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.